telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Wednesday 19 February 2014

பிரம்மகத்தி தோஷம்

பிரம்மகத்தி தோஷம் நீங்க பரிகார பூஜை!



மேல் மலையனூரில் அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தை காண வருவது வழக்கம். ஏன் அன்று மட்டும் அவ்வளவு பக்தர்களின் கூட்டம் என நம் மனதில் கேள்வி எழலாம். அதற்கு காரணம், மேல்மலையனூர் சக்தி புராணங்களில் மிகவும் முக்கியமானது. இதில் உலக ஜீவன்களுக்கு படி அலக்கும் சிவனுக்கோ பிரம்ம தோஷம் பிடிக்கிறது.
bhama hasti dosham pariharam பிரம்மகத்தி தோஷம் நீங்க பரிகார பூஜை!
அந்த பிரம்ம தோஷம் ஆனது சிவன் ராத்திரி அடுத்த நாள் மயானக் கொள்ளை அன்று ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியால் சிவனுக்கு பிரம்ம தோஷம் நீங்குகிறது. ஆகையால் மேல்மலையனூர் சக்தி புராணங்களில் இடம் பிடித்தது. அமாவாசை சிவம் ராத்திரிக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுகிறது.
சரவணன் என்ற பூசாரியிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் அமாவாசைக்கு முன்பு சிவன் ராத்திரி என்றும் அன்று மறுநாள் அமாவாசை அன்று சுடுகாட்டில் அம்மனை சாந்தி படுத்த படையலிட்டு பொறி, கடலை, கொழுக்கட்டை போன்றவற்றை படையலிட்டு பிரம்மன் தலைக்கு இறைப்பது வழக்கம்.
மற்றும் அன்று இரவு அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடி அம்மனை சாந்தி படுத்துவார்களாம். அமாவாசை அன்று வழக்கமாகவே அம்மன் உக்கிரமாக இருப்பாள் என்றும் அம்மனை சாந்தி படுத்தவே ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. அதனால் அன்றைக்கு வரும் பக்தர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது.
ஏவல், பில்லி சூனியம் நீங்கியும் நினைத்த காரியங்கள் நடை பெறுவதாகவும் மக்கள் நம்புகின்றனர். மாதம் மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும் பகுதியினருக்கு மூலஸ்தானத்தில் அம்மன் காலடியில் உள்ள தலை பற்றி தெரிந்திருப்பதில்லை.
பிரம்மனால் படைக்கப்பட்ட எந்த உயிரையும் கொன்றாலோ அல்லது அழித்தாலோ பிரம்ம கத்தி தோஷம் பிடிக்கும் என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது. எனவே இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ உயிர்களை கொன்று இருக்கலாம். இதனால் பிரம்மகத்தி தோஷம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
நீங்களும் சிவன் போல் பித்து பிடித்து அலைய வேண்டாம். இதற்கு பரிகாரம் மேல்மலையனூரில் நடக்கும் மாசி மாதம் அமாவாசை நாளில் சென்று இரவு தங்கினால் உங்களுடைய பாவங்கள் நீங்கும். பிரம்மகத்தி தோஷமும் நிவர்த்தியாகும்.
பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு பிரம்ம கத்தி தோஷம் பிடித்த இந்த பிரம்ம கத்தி தோஷம் மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின் போது நிவர்த்தியானது என்பது குறிப்பிடத்தக்கது.
thagaval upayam : http://tamilthoguppu.com/

No comments:

Post a Comment