telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Thursday 12 December 2013

பன்னிரண்டு முக ருத்ராட்சம்..!


பன்னிரண்டு முக ருத்ராட்சம் துவாதச ஆதித்யர்களின் ஆதிக்கம் பெற்றதாகும் . மகாவிஷ்ணுவின் அருள் பெற்றதாகவும் கூறபடுகிறது. இந்த மணியை பூஜிபதாலோ,அணிவதாலோ அக்னி நோய் பற்றிய அம்சங்கள் விலகும்.
செல்வம் ,மகிழ்ச்சி பெருகும் .வாழ்வில் ஏழ்மையே வரது என்று பத்மபுராணம் கூறுகிறது.
ஆயுதங்கள் கொண்ட மனிதன் ,கொம்புகளை கொண்ட விலங்குகள்,சிங்கம் போன்ற கொடிய விலங்குகள் ஆகியவற்றின் மீதான அச்சத்தை இந்த மணி விலக்கும் ,உடல் ,மன வலியைப் போக்கும்.
இதை அணிவதால் பிற மனிதர்களை ஆளும் தன்மை ,தலைமை பதவி அனைத்தும் வந்து சேரும்.எல்லா விதமான சந்தேகங்களையும் தீர்த்து முழுமையான அறிவைத்தரும்.
இம்மனியும் அபூர்வமாகவே கிடைக்கிறது
யார் அணியலாம்:
அதிகாரிகள் ,தொழில் அதிபர்கள் ,அரசியல் பிரமுகர்கள் போன்றோர் இதை அணிவதால் தலைமைபதவிக்கு உயர்வார்கள்.
சூரிய ஆதிக்கம் பெற்ற பன்னிரண்டு முக ருத்ராட்சத்தை அணிபவர்கள் கீழ்க்கண்ட நியமங்களை கடைப்பிடித்தால், இந்த மணியின் சக்தி பல மடங்கு அதிகரிக்கும் .
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழ வேண்டும்.
குளித்த பின்பு சூரியனுக்கு ஜல நிவேதனம் செய்து சூரிய பகவானின் 21 அல்லது 108 திரு நாமங்களைக் கூற வேண்டும்.
ஞாயிற்று கிழமைகளில் ஆதித்ய ஹ்ருதயம் , காயத்ரி மந்திரங்களி உச்சாடனம் செய்ய வேண்டும்.
ஞாயிற்று கிழமைகளில் உப்பு ,எண்ணெய் , இஞ்சி போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் .
தினமும் கண்களிலும்,கண் இமைகளிலும் இம்மணியை வைத்து வணங்க வேண்டும்.
ருத்ராட்சமும் ஜோதிடமும்:
ஒரு முக மணியை போலவே சூரிய ஆதிக்கம் பெற்றது .ஒரு முக ருத்ராட்சத்தின் பலன்கள் கிடைக்கும் .
ருத்ராட்ச மந்திரம் :
ஓம் க்ரோம் க்க்ஷோம் ரவ்ம் நமஹ :

No comments:

Post a Comment