telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Thursday 14 March 2013

அகத்தியரின் சோடசமாலை






அகத்தியரின் சோடசமாலை -  2  - துவிதியை திதி

துதிகையென்றும் உபயமென்றும் இடையின் என்றுஞ்
சுவர்க்கமென்றும் நரகமென்றுஞ் சொல்லக் கேட்டு
மதிரவியா யடிமுடியாய் உயராண பெண்ணாய்
வாழ்வாகித் தாழ்வாகி வழங்குந் தாயே!
விதிதொலந்து வினைதொலைந்து வெட்கங் கெட்டு
வீம்பவும் ஆசைதுக்கம் விட்டே யோட்டு
சுதன முகம்பார் மதிமுகத்தால் சூட்சாசூட்சி
சோதியே! மனோன்மணியே! சுழிமுனை வாழ்வே!



த்ரிதியை திதி

திரிதிகையில் அசுத்தமற்றுச் சுத்தமாகிச்
சிற்சொரூபந் தனைச் சேர்ந்த தெளிவே கண்டு 
உறுதியுடன் உனதுபதம் அகலாச் சிந்தை
உறவு செய்வாய் உம்பரையே உமையே தாயே
அறுதியாய் இகத்தாசை அகன்ற ஞான
ஆனந்த வாசையைத்தா அடியேனுக்குச்
சுருதியிலே மனமிருக்கத் துணை செய் தாயே!
சோதியே! மனோன்மணியே! சுழிமுனை வாழ்வே!


No comments:

Post a Comment